×

8வது முறையாக இந்தியா சாம்பியன்

பூசன்: ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 8வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. தென் காரியாவில் நடந்த இந்த தொடரின் பைனலில் இந்தியா – ஈரான் அணிகள் நேற்று மோதின. கேப்டன் பவன் ஷெராவத், அஸ்லாம் இனாம்தார், தற்காப்பு ஆட்டக்காரர்கள் சுர்ஜித், பர்வேஷ் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 23-11 என்ற புள்ளிக் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. 2வது பாதியில் ஈரான் கடும் நெருக்கடி கொடுத்தாலும், பதற்றமின்றி விளையாடிய இந்தியா 42-32 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 8வது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. 2003ல் மலேசியாவில் நடந்த போட்டியில் மட்டும் ஈரான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

The post 8வது முறையாக இந்தியா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : India ,Busan ,Asian Kabaddi Championship ,South Korea ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை