×

சொலிசிட்டர் ஜெனரலாக மீண்டும் 3 ஆண்டுகளுக்கு துஷார் மேத்தா நியமனம்

புதுடெல்லி: இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தாவை மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 10 தேதி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு இரண்டு முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது 3வது முறையாக 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஒன்றிய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தவிர உச்ச நீதிமன்றத்திற்கான ஆறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக விக்ரம்ஜித் பானர்ஜி, கே.எம்.நடராஜ், பல்பீர் சிங், எஸ்.வி.ராஜு, என்.வெங்கடராமன் மற்றும் ஐஸ்வர்யா பதி ஆகிய 6 பேரும் மேலும் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post சொலிசிட்டர் ஜெனரலாக மீண்டும் 3 ஆண்டுகளுக்கு துஷார் மேத்தா நியமனம் appeared first on Dinakaran.

Tags : Tushar Mehta ,New Delhi ,Union Government ,General ,India ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...