- ஸ்டான்லி மருத்துவமனை
- ரவுடி ராக்கெட் கிங்
- சென்னை
- ஸ்டான்லி அரசு மருத்துவமனை
- ராஜா
- திருநெல்வேலி மாவட்டம்
- ரௌடி
சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா என்ற ராக்கெட் ராஜா (51). இவர் மீது பல்வேறு வழக்குகள் நாங்குநேரி காவல் நிலையத்தில் உள்ளன. இதனால் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா தற்போது புழல் சிறையில் தடுப்பு காவலில் உள்ளார். இந்நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், எனவே தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் உயர் நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா அனுமதி கேட்டிருந்தார்.
அதன்பேரில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக புழல் சிறையில் இருந்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற பரிந்துரைத்தனர். இதையடுத்து, அங்கு 4வது மாடியில் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டில் ராக்கெட் ராஜா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post ஸ்டான்லி மருத்துவமனையில் ரவுடி ராக்கெட் ராஜாவுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.