×

மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பணிக்கு தேர்வான 120 பேருக்கு நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மாவட்ட தீயணைப்பு அலுவலர் மற்றும் 120 தீயணைப்போர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணை வழங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் செயல்திறனை மேம்படுத்திட புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் அமைத்தல், பணியாளர்களுக்கு குடியிருப்புகளை கட்டுதல், புதிய வாகனங்களை கொள்முதல் செய்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடத்திற்கு இருசம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைத்தால் தீயணைப்போர் பணியிடத்திற்கு 120 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 5 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலருக்கு 4 மாத நிறுவனப் பயிற்சியும், தீயணைப்போருக்கு 3 மாத அடிப்படை பயிற்சியும் தாம்பரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாநில பயிற்சி மையத்தில் வழங்கப்படும்.

The post மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பணிக்கு தேர்வான 120 பேருக்கு நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : District Fire Officer ,CM. G.K. Stalin ,Chennai ,Chief Minister ,BC ,G.K. Stalin ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...