×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்: சிபிஐ-க்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க சிபிஐ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் செய்யபட்ட நாளில் இருந்து 3மாதங்களில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது சிபிஐ தரப்பில் இன்னும் 8 சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டது. சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான் குளம் போலிசார் விசாரணைக்கு அழைத்து சென்று தக்கியதில் இருவரும் உயிரிளந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. 2020 செப்டம்பரில் சிபிஐ இதில் குற்றபத்திரிக்கை தக்கல் செய்தது.

மேலும் இந்த வழக்கில் 9 காவலர்கள் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு ந்டைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஒரு மனு தக்கல் செய்துள்ளார். அதில் எதிரிகளாக கருதபடும் போலிசார் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள், அவர்கள் சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது. எனவே மதுரை கூடுதல் அமர்வு நீதுமன்றத்தில் நடைபெறும் விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.

மதுரை மாவட்ட நீதிமன்ற சார்பில் இரண்டு முறை காலநீட்டிப்பு செய்ய மனுதாக்கல் செய்யபட்டது. அதற்கு கால நீட்டிப்பும் வழங்கபட்டது.

இதனை அடுத்து இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்ற மதுரைகிளையில் விசாரணைக்கு வந்தது. அப்பொது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிடமாற்றம் செய்யபட்டுள்ளார். நீதிபதி பணியிடம் காலியாகவுள்ளது. அதுபோக சிபிஐ தரப்பில் 8 முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது. 2 மருத்துவர்கள், 1 நீதித்துறை நடுவர், இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி அதிகாரி, 3 தனிநபர் சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது. ஆகவே 2 முதல் 3 மாதங்கள் கால அவகாசம் தேவை என கோரிக்கை விடுக்கபட்டது.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நியமனம் செய்யபட்ட நாளில் இருந்து 3 மாதங்களில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் உத்தரவு பிறபித்துள்ளார்.

The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்: சிபிஐ-க்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Satankulam ,iCourt ,CPI ,Madurai ,Maduraikil ,Dinakaran ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்