கிருஷ்ணகிரி: பாரூர் பெரிய ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் ஐந்து நாட்களுக்கு நாற்றுவிட தண்ணீர் விட்டும் பிறகு முறைப்பாசனம் மூலம் 3 நாட்கள் மதகை திறந்துவிட்டும், 4 நாட்கள் மதகை மூடி வைத்தும் சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6.00 மி.க.அடி வீதம் 03.07.2023 முதல் 14.11.2023 முடிய 135 நாட்களுக்கு மொத்தம் 379.44 மி.க.அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2397 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
The post பாரூர் பெரிய ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு appeared first on Dinakaran.