×

ஆந்திராவில் பிரபல மருந்து நிறுவன தொழிற்சாலையில் வெடி விபத்து: 35 பணியாளர்களில் 7 பேர் மட்டுமே காயங்களுடன் மீட்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் அச்சுதாபுரத்தில் உள்ள மருந்து தயாரிக்கும் பிரபல தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் அச்சுதாபுரத்தில் உள்ள தொழிற்பூங்காவில் சாய்தி பார்மா என்னும் மருந்தக தொழிற்சாலையானது செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம்போல தொழிலாளர்கள் காலை பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென 2 பாய்லர்கள் வெடித்து சிதறியது. ரசாயன கலவை கொண்ட இந்த பாய்லர்கள் வெடித்து சிதறிய நிலையில் உடனடியாக தீ பிடித்து ஏறிய தொடங்கியது.

சம்பவம் நடந்த இடத்தில் 35 பேர் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் இருவர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு தொழிற்சாலையில் சிக்கிய நபர்கள் உள்ளார்கள் என்று தெரியாத நிலையில் தீயணைக்கும் பணியாளர்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். 2 தீயணைப்பு வீரர்கள் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post ஆந்திராவில் பிரபல மருந்து நிறுவன தொழிற்சாலையில் வெடி விபத்து: 35 பணியாளர்களில் 7 பேர் மட்டுமே காயங்களுடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Andhra ,Achuthapuram, Anakapalli district ,Dinakaran ,
× RELATED ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் மீது கொடூர தாக்குதல்