×

மணப்பாறை அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகளை தீயிட்டு எரித்தபோது தீ பற்றி ஊழியர் பலி..!!

மணப்பாறை: மணப்பாறை அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகளை தீயிட்டு எரித்தபோது உடலில் தீ பற்றி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் கலையரசன்.

மறவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கொசு ஒழிப்பு பணியாளராக பணியாற்றிவந்த அவர் கடந்த 26ம் தேதி மணப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் இந்நிலையில் மருந்து, மாத்திரைகளை, தீ வைத்து எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவரின் சட்டையில் திடீரென தீ பற்றி உள்ளது.

இதை அடுத்து அவரை அங்குள்ள ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 60 விழுக்காட்டிற்கு மேல் தீ காயங்கள் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எரிக்கப்பட்ட மாத்திரைகள் பெரோசல்பேட் மற்றும் போலிக் ஆசிட் மாத்திரைகள் என்பதும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரைகள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் அடுத்தாண்டு இறுதியில் தான் காலாவதி ஆகும் தேதி உள்ள நிலையில் காலாவதியாகும் முன்பே பெட்டி பெட்டியாக எரிக்க வேண்டிய தேவை என்ன என்று துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

The post மணப்பாறை அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகளை தீயிட்டு எரித்தபோது தீ பற்றி ஊழியர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Manipara Government Hospital ,Mangapara ,Marapara Government Hospital ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...