சென்னை: தமிழ்நாடு அரசின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய டிஜிபியாக பொறுபேற்ற சங்கர் ஜிவாலிடம், சைலேந்திர பாபு பொறுப்புகளை ஒப்படைத்தார். தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு இன்றுடன் ஓய்வு பெறுவதால் கோப்புகள் அனைத்திலும் கையெழுத்திட்டு புதிய பதவியேற்ற சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்தார். 32-வது டிஜிபியாக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்றுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவை பூர்வீகமாகக் கொண்ட சங்கர் ஜிவால், 1990-ம் ஆண்டு சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆனார். கடந்த 2021-ல் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட சங்கர் ஜிவால் 3 ஆண்டு காலமாக பதவியில் இருந்தார். ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிபடை தலைவராகவும் இருந்துள்ளார். சேலம், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருச்சி மாநகர காவல் ஆணையராகவும் சங்கர் ஜிவால் இருந்துள்ளார்.
தென்மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைவராக 2004-முதல் 2006 வரை இருந்துள்ளார். உளவுத்துறை ஐஜியாகவும் சங்கர் ஜிவால் பதவி வகித்துள்ளார். 2007-ல் சிறந்த காவல் சேவைக்கான காவலர் பதக்கமும், 2019-ல் குடியரசுத் தலைவர் காவல் பதக்கமும் சங்கர் ஜிவால் பெற்றுள்ளார்.
The post தமிழ்நாடு அரசின் 32-வது சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றார் சங்கர் ஜிவால் appeared first on Dinakaran.