×

சவுதி அரேபியாவில் அமெரிக்க துணை தூதரகம் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு

வாஷிங்டன்: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அந்த நபரை தடுக்க முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உள்ளூர் பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பின்னர் தப்பிச் செல்ல முயன்ற மர்ம நபரை சவுதி பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. துப்பாக்கி சூட்டையடுத்து அமெரிக்க தூதரகம் உடனடியாக மூடப்பட்டது. இந்த சம்பவத்தில் அமெரிக்காவை சேர்ந்தவர்களோ, அமெரிக்க ஊழியர்களோ காயமடையவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

The post சவுதி அரேபியாவில் அமெரிக்க துணை தூதரகம் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.

Tags : US consulate ,Saudi Arabia ,Washington ,Jeddah, Saudi Arabia ,Dinakaran ,
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!