×

காற்றாலை மின் உற்பத்தி 3,500 மெகாவாட் ஆனது

நெல்லை: தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகள் உள்ளன. தற்போது காற்று சீசன் தொடங்கியுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 3582 மெகாவாட் மின்சாரம் காற்றாலை மூலம் கிடைத்துள்ளது. இதனால் அரசு காற்றாலை மின்சாரத்தை அதிகளவில் கொள்முதல் செய்து பயன்பாட்டிற்கு வழங்குகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் வரும் நாட்களில் இந்த மின் உற்பத்தி அளவு மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

The post காற்றாலை மின் உற்பத்தி 3,500 மெகாவாட் ஆனது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Tamil Nadu ,Nellai district ,Dinakaran ,
× RELATED பாஜ நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்