×

ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஞாயிறு அன்று மூலஸ்தான சேவை கிடையாது

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வரும் ஞாயிறு (02.07.2023) முழுவதும் மற்றும் திங்கள் (03.07.2023) மாலை 4.00 மணி வரை மூலஸ்தான சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற ஆனி மாதம் 17-ம் தேதி (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் என்பதால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது.

மறுநாள் ஆனி மாதம் 18-ம் தேதி (03.07.2023) திங்கள்கிழமை அன்று மாலை 4.30மணி முதல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம். மேலும் மூலவர் பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால் அது உலரும் வரை மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும் என்று பக்தர்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஸ்ரீரங்கம் கோயிலில் வரும் ஞாயிறு அன்று மூலஸ்தான சேவை கிடையாது appeared first on Dinakaran.

Tags : Srianangam Temple ,Srirananga ,Arulmigu Aranganatha Swami ,Thirukoil ,Sriranangam Temple ,
× RELATED கிருஷ்ண ஜெயந்தி விழா: ஸ்ரீரங்கத்தில் இன்றிரவு உறியடி உற்சவம்