×

டூவீலர் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

 

உடன்குடி, ஜூன் 29: குலசேகரன்பட்டினத்தில் சாலையோர தடுப்பு சுவரில் டூவீலர் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். உடன்குடி அருகே உள்ள மணப்பாடு மீனவர் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ரென்சோ(29). இவரும், நண்பரான இதே பகுதியை சேர்ந்த ஜீவன் மகன் எமிலி(32) ஆகியோரும் கடந்த 23ம் தேதி டூவீலரில் குலசேகரன்பட்டினம் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலைதடுமாறி டூவீலர் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரென்சோ சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த எமிலி, நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் தீவிர சிகிச்சை பலனின்றி எமிலி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Toweweiler ,Udungudi ,Kulasekaranpattinam ,Udunkudi ,Toweweeler ,Valiers ,
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது