×

சளியால் பாதித்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ்

கடலூர்: கடலூர் அருகே கோதண்டராமாபுரத்தை சேர்ந்த கருணாகரன் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய மூத்த மகளான சாதனாவை (13) கடந்த 27ம் தேதி சளி மற்றும் காய்ச்சலுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு சாதனாவுக்கு நர்ஸ் 2 ஊசிகள் போட்டனர். எதற்கு 2 ஊசி போடுகிறீர்கள் என்று கேட்டதற்கு நர்ஸ் நாய் கடிக்கு 2 ஊசி தான் போடுவார்கள் என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் சளிக்கு ஏன் நாய்க்கடி ஊசி போட்டீர்கள் என்று கேட்டேன். ஆனால் நர்ஸ் மழுப்பலாக பதில் அளித்தார். வீட்டிற்கு சென்ற சாதனாவிற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளேன். எனது மகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த நர்ஸ், அப்போது பணியில் இருந்த மருத்துவர், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post சளியால் பாதித்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட நர்ஸ் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Karunakaran ,Kothandaramapuram ,Pudunagar ,station ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்