×

கயர்லாபாத்தில் தனியாக வசித்து வந்த தொழிலாளி பிணமாக மீட்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் நடுத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சூரியகலா (40). இவர்களுக்கு திருமணம் நடந்து 27 ஆண்டுகளாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 20 ஆண்டுகளாக பன்னீர்செல்வமும், சூரியகலாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் நிலத்தில் ஓலை குடிசை அமைத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் ஊர்மக்கள் ஓலை குடிசையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சூரியகலாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சூரியகலா தனது இரு மகன்களுடன் கயர்லாபாத் வந்து ஓலை குடிசையை திறந்து பார்த்தபோது கணவர் பன்னீர்செல்வம் அழுகிய நிலையில் தரையில் படுத்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனில் சூரியகலா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் எஸ்எஸ்ஐ வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கயர்லாபாத்தில் தனியாக வசித்து வந்த தொழிலாளி பிணமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Khairlabad ,Ariyalur ,Panneerselvam ,Khairlabad Middle Street, Ariyalur district ,Suryakala ,Kairlabad ,
× RELATED அரியலூரில் முன்னேற்பாடு பணி ஆய்வு...