×

திரிபுரா ரதத்தில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலி

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் ரதத்தில் மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகி விட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். திரிபுரா மாநிலம் குமார்காட் பகுதியில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகநாதர் ரத ஊர்வலம் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் ரதத்தை இழுத்துச்சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற 133 கிலோவாட் மின்சார வயர் மீது ரதத்தின் பகுதி பட்டது. இதில் ரதம் தீப்பற்றி எரிந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

The post திரிபுரா ரதத்தில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : ratha ,Agartala ,Tripura ,
× RELATED சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் திரிபுராவில் கைது