×

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து 2வது முறையாக தமிழ்நாடு சாம்பியன்

அமிர்தசரஸ்: தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் அரியானா அணியுடன் நேற்று மோதிய தமிழ்நாடு 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. தமிழ்நாடு வீராங்கனைகள் சந்தியா, இந்துமதி தலா 1 கோல் அடித்தனர். ஏற்கனவே 2018ல் தேசிய சாம்பியன் பட்டம் வென்றிருந்த தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி, 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று 2வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் தமிழ்நாடு ஒரு போட்டியில் கூட தோற்காமல் சாம்பியனாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 27வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post தேசிய சீனியர் மகளிர் கால்பந்து 2வது முறையாக தமிழ்நாடு சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : National Senior Women's Football ,Nadu ,Amritsar ,Tamil Nadu ,National Senior Women's Football Championship ,National Senior Women's Football Tamilnadu ,Dinakaran ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...