×

கர்நாடகா முழுவதும் அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா ரெய்டு: லட்சக்கணக்கில் ரொக்கம், ஆவணங்கள் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகா முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று அதிகாலையில் சோதனை நடத்தினர். இதில், சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கே.ஆர்.புரா தாசில்தார் வீட்டில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் கணக்கில் வராத கணிசமான பணம் மற்றும் தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட சொத்துகளின் முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

குடகு மாவட்டத்தில் உள்ள குடிநீர் மற்றும் துப்புரவு துறை அதிகாரி பஷீர் வீட்டிலும், அவரது சகோதரர் வீட்டிலும் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகாரி வீட்டில் 14 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதே போல் 12 மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு நடத்திய அதிகாரிகள் கணக்கில் காட்டாத பணம், ஆவணங்களை கைப்பற்றினர்.

The post கர்நாடகா முழுவதும் அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா ரெய்டு: லட்சக்கணக்கில் ரொக்கம், ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Lokayukta ,Karnataka ,Bengaluru ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...