×

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் ஜூலை 13ம் தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அதிகாரிகள் தகவல்

பெங்களுரு: ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-3 விண்ணில் செலுத்தப்படுகிறது. விண்கலத்தின் அனைத்து பாகங்களும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அறிவிப்பு வெளியாகியுள்ளது. சந்திராயன்-3 விண்கலம் உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது.

நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக இறங்குதல், உலாவுதல், லேண்டர் – ரோவர் கட்டமைப்பை கொண்டுள்ளது சந்திராயன்-3 விண்கலம். நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக சந்திராயன்-3 விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் சந்திரயான்-3 விண்கலம் LVM MK 3 ராக்கெட்டில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அடுத்த கட்டமாக ராக்கெட் அடுக்குகளை ஒருங்கிணைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி ஜூலை 12 முதல் 19க்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 13-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் ஜூலை 13ம் தேதி மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Bengaluru ,Dinakaran ,
× RELATED குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி...