×

ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பிரச்சனைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிந்து, உடனடியாக தீர்வு காண வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு

சென்னை: மாணவர்களுக்கு கற்றல் பணிகளில் தொய்வு இருக்கக் கூடாது, அவர்களை படிக்க சொல்ல வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் கற்பிக்கும் திறன் சரியில்லை எனவும், ஆங்கிலம் சரியாக கற்றுக் கொடுப்பதில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதன் காரணமாகவே பல பெற்றோர் அதிக பணம் செலவழித்து தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கின்றனர். அந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான இரண்டு நாள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ” சென்னையில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து 20 மணி நேரம் பேசினோம். இருதரப்பிலும் கருத்துக்களை பரிமாறி கொண்டோம். சங்கங்கள் சார்பில் சுமார் 147 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் 50க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும். போட்டித் தேர்வுகளில் மாணவர்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பிரச்சனைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிந்து அவற்றிற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். 38 மாவட்டங்களிலும் மாணவர் சேர்க்கை கற்று கற்பித்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். கற்றல் பணிகளில் தொய்வு இருக்கக் கூடாது மாணவர்களுக்கு கற்றல் திறன் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய அவர்களை உரக்க படிக்க சொல்ல வேண்டும்.

சில பள்ளிகளில் ஆங்கில சொற்களை படிக்கத் தெரியாமல் மாணவர்கள் திணறும் நிலை இருக்கிறது. அதை போக்க அவர்களை உறக்கப் படிக்க சொல்லித் தர வேண்டும். கற்றல் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை பாராட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் கற்றலில் சிறப்பாக உள்ள மாணவர்களையும் பாராட்ட வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள் உதவிக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளை பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். அடுத்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் காட்டும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும். தமிழ்நாடு தான் கல்வியில் சிறப்பாக உள்ளது என்று பாராட்டுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார் அந்த வகையில் துறைக்கு பாராட்டு கிடைக்கும் வகையில் செயல்படுவது அவசியம்.” என்று அவர் கூறினார்.

The post ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பிரச்சனைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிந்து, உடனடியாக தீர்வு காண வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Love Magesh ,Chennai ,Magesh ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...