கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்று தீட்சிதர்கள் அறிவித்தபடி கனகசபை மீது பக்தர்கள் ஏறி தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு பூஜைகள், பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதிக்க முடியாது என தீட்சிதர்கள் கூறியிருந்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் நேற்று கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர்.
The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி appeared first on Dinakaran.