×

பேராசிரியர், அ.முகமது அப்துல் காதர். கல்வியாளர்.

காங்கயம்: காங்கயம் அருகே சிவன்மலை கிரிவலப்பாதையில் உள்ள அனுமந்தராய சுவாமி கோவிலில் துணிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. துணிகள் பற்றி எரிந்தன. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயினை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பற்றி ஏறிய ஆரம்பித்ததை தொடர்ந்து காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். பின்னர் சில மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அறையில் வைக்கப்பட்டிருந்த பரிவட்டங்கள் கட்ட பயன்படுத்திய துணிகள் தீயில் எரிந்து சேதம் ஆனது. தீ விரைந்து அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. +2 முடித்த மாணவர்களுக்கான பயனுள்ள படிப்புகள்

The post பேராசிரியர், அ.முகமது அப்துல் காதர். கல்வியாளர். appeared first on Dinakaran.

Tags : A. Mohammad Abdul Qader ,Kangayam ,Anumantaraya Swamy temple ,Sivanmalai Kriwalabathi ,Kangyam ,A. Muhammad Abdul Kader ,
× RELATED மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்