×

தோமூர் கிராமத்தில் ₹35 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகம்: எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார்

திருவள்ளூர், ஜூன் 28: திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், தோமூர் கிராமத்தில் ₹ 35 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் இயக்குனர் இளங்கோ தலைமை தாங்கினார். மண்டல இணை இயக்குனர் (பொ) கே.சீனிவேலன், உதவி இயக்குனர் வி.பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், வட்டாட்சியர் என்.மதியழகன், ஒன்றிய குழு பெருந்தலைவர் பி.வெங்கட்ரமணா, துணைபெருந்தலைவர் மகாலட்சுமி மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தவிழாவில், திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் புதிய கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்தார். இதில், திமுக ஒன்றிய செயலாளர் தா.கிறிஸ்டி, பொதுக்குழு உறுப்பினர் பா.சிட்டிபாபு, தா.மோதிலால், கே.பாஸ்கர், சௌவுக்கர் பாண்டியன், கால்நடை உதவி மருத்துவர்கள் பிரேம், ஷர்மிளா, சரவணகுமார், நதியா, திலகவதி, நாகலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர் சேகர், ஒன்றியக்கவுன்சிலர்கள் வி.விஜி, சண்முகம் ஊராட்சி தலைவர் சிவசக்தி குமரவேல் , கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தோமூர் கிராமத்தில் ₹35 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகம்: எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Thomur village ,MLA VG ,Rajendran ,Tiruvallur ,Tiruvallur district ,Poondi ,dispensary ,Tomur village ,
× RELATED விராலிமலை சாலை விபத்தில் வாலிபர் பலி