×

கோயில் நிலத்தை அபகரித்த பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை கைது செய்யக்கோரி முற்றுகை

புதுச்சேரி, ஜூன் 28: புதுச்சேரியில் கோயில் நிலத்தை அபகரித்த பாஜகவை சேர்ந்த ஜான்குமார் எம்எல்ஏவை கைது செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். போலி பத்திரப் பதிவு மோசடி கும்பலால் அபகரிக்கப்பட்ட காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை தன் குடும்பத்தார் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்ட பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை கைது செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை சமூக அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து திராவிடர் விடுதலை கழகத்தினர் ேநற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். முன்னதாக லோக.அய்யப்பன் தலைமையில் 80க்கும் மேற்பட்டோர் பேரணியாக திரண்டு வந்தனர். தி.க. சிவ.வீரமணி, மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், வாழ்வுரிமை இயக்கம் ஜெகன்நாதன், தந்தை பெரியார் தி.க. வீர.மோகன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி தர், அம்பேத்கர் படை பாவாடை ராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலைக் கழகத்தினர், சமூக அமைப்புகளுடன் இணைந்து மேற்ெகாண்ட பேரணியை மாவட்ட கலெக்டர் நுழைவு வாயில் அருகே தடுத்து நிறுத்தினர். அப்போது பேரிகார்டு போட்டும், கயிறு கட்டியும் அவர்களை தடுத்து நிறுத்திய கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார், முற்றுகையில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post கோயில் நிலத்தை அபகரித்த பாஜக எம்எல்ஏ ஜான்குமாரை கைது செய்யக்கோரி முற்றுகை appeared first on Dinakaran.

Tags : BJP ,MLA Jankumar ,Puducherry ,MLA ,Jankumar ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அடுத்த சேதராபட்டு...