×

திண்டிவனம் அருகே சோகம் பைக் மீது லாரி மோதி 2 இளைஞர்கள் பலி

திண்டிவனம், ஜூன் 28: திண்டிவனத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டிவனம் ரோசணை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் புவனேஸ்வரன் (23). இவரும், இவரது நண்பரான திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த சையத் மக்புல் மகன் முபாரக் (25) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி மார்க்கத்திலிருந்து திண்டிவனத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டிவனம் -புதுச்சேரி சாலை மரக்காணம் கூட்டுப்பாதை அருகே மரக்காணம் மார்க்கத்திலிருந்து திண்டிவனத்திற்கு வந்த லாரி, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முபாரக் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார் முபாரக்கை மீட்டு சிகிச்சைக்காகவும், புவனேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முபாரக் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திண்டிவனம் அருகே சோகம் பைக் மீது லாரி மோதி 2 இளைஞர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Thindivanam ,Tindivanam ,
× RELATED அனுமதியின்றி இ-சேவை மையம்: போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது