×

இன்றும் பயன்பாட்டில் உள்ளது காங்கிரஸ் கட்சி சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம் துவக்கம்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் 15 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும், திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தினை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜீத் சங்கர் துவக்கி வைத்தார். வழக்கறிஞர் அருண் ஷோரி முன்னிலை வகித்தார். முதல் கட்டமாக அதிக பயன்தரும் ஈத்தாமொழி என்று சொல்லக்கூடிய நாட்டு ரக 2500 தென்னங்கன்றுகளை வீடு வீடாக சென்று காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர். முதல் கட்டமாக தலைஞாயிறு பேரூராட்சியில் 2500 தென்னங் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் சுஜித் சங்கர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடேசன் மற்றும் வட்டார தலைவர் வேனுகோபல், நாகை நகர தலைவர் உதய சந்திரன், மாவட்ட இணை செயளாலர் பாரதிராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வானை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இன்றும் பயன்பாட்டில் உள்ளது காங்கிரஸ் கட்சி சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Vetaranthayam ,Vetaranthaya ,Thaluka Dadhanayatu ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...