மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கியுடன், வீட்டு வசதி கடன் நிறுவனமான ஹெச்டிஎப்சியை இணைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹெச்டிஎப்சி மற்றும் தனியார் வங்கி வாரியங்கள் 30ம் தேதி ஒன்று கூடி வங்கி மற்றும் வீட்டு வசதி கடன் நிறுவனத்தை இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று ஹெச்டிஎப்சி தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார். ஹெச்டிஎப்சி வங்கியுடன் வீட்டு வசதி கடன் நிறுவனம் இணைப்பானது ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
The post ஹெச்டிஎப்சி வங்கியுடன் ஹெச்டிஎப்சி வீட்டு வசதி கடன் நிறுவனம் இணைப்பு appeared first on Dinakaran.