×

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை: நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

நெல்லை:  நெல்லை மாவட்டம், பாப்பாக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கதிரேசன் (32). இவர், இதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 2016ல் கடத்திச் சென்றார். சிறுமியை சென்னை, மும்பை உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அப்போதைய பாப்பாக்குடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆட்டோ டிரைவர் கதிரேசனை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு, நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை நீதிபதி அன்புச்செல்வி விசாரித்து கதிரேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். …

The post சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டு சிறை: நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kadiresan ,Papakudi, Nelly District ,Paddy Boxo Court ,Dinakaran ,
× RELATED இன்னாசி பாண்டியன் படத்தில் வைஷாலி ராஜ்