சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மீன் வள சார்நிலை பணியில் அடங்கிய மீன்துறை ஆய்வாளர் (மீனவ நலத்துறை) பணியில் காலியாக உள்ள 66 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் 2,208 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் கலந்துகொண்ட தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு 133 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணையம் வலைதளம் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 11 மற்றும் 12ம் தேதிகளில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மீன்துறை ஆய்வாளர் பதவிக்கான ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.