×

கோயில் நிலம் அபகரிப்பு பாஜ எம்எல்ஏவை கைது செய்யக்கோரி முற்றுகை

புதுச்சேரி: போலி பத்திரப் பதிவு மோசடி கும்பலால் அபகரிக்கப்பட்ட காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை தன் குடும்பத்தார் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்ட பாஜ எம்எல்ஏ ஜான்குமாரை கைது செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை சமூக அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து திராவிடர் விடுதலை கழகத்தினர் ேநற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். முன்னதாக லோக.அய்யப்பன் தலைமையில் 80க்கும் மேற்பட்டோர் பேரணியாக திரண்டு வந்தனர். அவர்களின் பேரணியை கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பேரிகார்டு போட்டும், கயிறு கட்டியும் அவர்களை தடுத்து நிறுத்திய கோரிமேடு போலீசார், முற்றுகையில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர்.

The post கோயில் நிலம் அபகரிப்பு பாஜ எம்எல்ஏவை கைது செய்யக்கோரி முற்றுகை appeared first on Dinakaran.

Tags : BJP MLA ,Puducherry ,Kamakshi Amman Temple ,Baja MLA ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் பாஜவுக்கு எதிர்ப்பு...