×

இந்த ஊரு பிடிக்கல சார்… கைலாசாவுக்கு அனுப்புங்க! கலெக்டரிடம் பெருசு அடம்

என்னய்யா இந்த நாடு…சே என்னப்பா இந்த ஊரு… என்னா வெயில் கொளுத்துது.. இப்படியா மழை பெய்யறது.. ரோடாயா இது இந்த நாட்ட, ஊர விட்டே ஓடிடலாம் போல இருக்கு… சப்பை காரணங்களுக்காக இப்படி அங்கலாய்ப்பவர்களை பார்த்திருக்கிறோம். இதற்கு சற்றும் சளைக்காத வகையில் ஒரு நபர், ‘என்ன நித்தியின் கைலாசாவுக்கு அனுப்புங்க சார்’ என்று கலெக்டரிடம் மனு அளித்திருப்பது வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் செல்வராஜ் என்ற முதியவர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அதில், ‘எங்க பகுதி நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் இந்த நாட்டில் எனக்கு வசிக்க விருப்பம் இல்லை. எனவே என்னை நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். அவரது போட்டோவும், மனுவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post இந்த ஊரு பிடிக்கல சார்… கைலாசாவுக்கு அனுப்புங்க! கலெக்டரிடம் பெருசு அடம் appeared first on Dinakaran.

Tags : Kailasa ,Adam ,Dinakaran ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு