×

விடுறா ஜூட்…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் இடையே குஞ்சப்பனை, முள்ளூர், மாமரம், தட்டப்பள்ளம் ஆகிய கிராமங்களில் பலாப்பழ சீசன் துவங்கி உள்ளது. இதனால், சிறுமுகை, மேட்டுப்பாளையம் போன்ற வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானைகள் இப்பகுதிகளை முகாமிட்டுள்ளன. இதில் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை, நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு வந்த சில சரக்கு லாரிகளை வழிமறித்து, அவைகளில் ஒரு லாரியை சுற்றி ஏதேனும் உணவு பொருட்கள் உள்ளதா என தார்பாலின் சீட்டுக்களை விலக்கி பார்த்தது. இதனால் பயந்துபோன டிரைவர் லாரியில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார். அவரை அந்த யானை விரட்டியது. இதனை எதிரே சென்ற சில லாரி டிரைவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post விடுறா ஜூட்… appeared first on Dinakaran.

Tags : Kunjapanai ,Mullur ,Mamaram ,Thattapallam ,Kothagiri- ,Mettupalayam ,Nilgiri district ,Vidura ,
× RELATED புதுக்கோட்டை மாநகராட்சியுடன்...