×

சிதம்பரம் கோயிலில் அதிகார மையமாக தீட்சிதர்கள் செயல்படுகின்றனர்; விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: சிதம்பரம் கோயிலில் அதிகார மையமாக தீட்சிதர்கள் செயல்படுகின்றனர்; விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசித்து வருகிறோம். சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்கள் சொந்த நிறுவனம் போல தீட்சிதர்கள் நினைக்கிறார்கள்; ஒட்டுமொத்த பக்தர்களும் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள். ஆவணங்களை திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெறும் என அமைச்சர் கூறியுள்ளார்.

The post சிதம்பரம் கோயிலில் அதிகார மையமாக தீட்சிதர்கள் செயல்படுகின்றனர்; விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chidambaram temple ,Minister ,Shekharbabu ,CHENNAI ,
× RELATED சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ...