சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.5 கோடி வாங்கியதாக தெரியவந்த நிலையில் விசாரணையில் ரூ.15 கோடி என்பது உறுதியானது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் விவகாரத்தில் 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். 500 முகவர்கள் மூலம் ரூ.800 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக விசாரணையில் அம்பலம் செய்துள்ளார்.
The post ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலம்! appeared first on Dinakaran.