×

ஆனி திருமஞ்சனத்தில் நடராஜர் வீதியுலா பக்தர்கள் திரண்டு தாிசனம்

பழநி: பழநி கிழக்கு ரத வீதியில் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் நேற்று ஆனித்திருமஞ்சன நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து ரதவீதிகளில் நடராஜர்- சிவகாமி அம்மன் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனர்.

The post ஆனி திருமஞ்சனத்தில் நடராஜர் வீதியுலா பக்தர்கள் திரண்டு தாிசனம் appeared first on Dinakaran.

Tags : Ani ,Thirumanjanam ,Nataraja Vethiula ,Palani ,Periyanayake Amman Temple ,Palani East Ratha Road ,Palani Dandayuthapani Swami Temple ,Ani Thirumanjanam ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி...