×

மகளிர் நீதிமன்ற நீதிபதி அறிவுரை நிப்ட்-டீ கல்லூரியில் பின்னலாடை நிறுவன கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி

திருப்பூர்: பின்னலாடை நிறுவன அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் கால் இறுதி போட்டிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் முதல் போட்டியில் சி.ஆர்.கார்மெண்ட்ஸ் ஈகிள்ஸ் அணியும், குவாண்டம் நிட்ஸ் 3 அணியும் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த சி.ஆர். கார்மெண்ட்ஸ் ஈகிள்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் பேட்டிங் செய்த குவாண்டம் நிட்ஸ் 3 அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.2-வது போட்டியில் ஈ.எஸ்.எஸ்., ஈ.என்.என். எக்ஸ்போர்ட்ஸ் அணியுடன் சி.ஆர்.கார்மெண்ட்ஸ் டைகர்ஸ் அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஈ.எஸ்.எஸ். ஈ.என்.என். எக்ஸ்போர்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. சி-.ஆர். கார்மெண்ட்ஸ் டைகர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. கால் இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. வருகிற 2-ந் தேதி நடைபெற உள்ள அரை இறுதி போட்டியில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் அணியும், ரிதம் நிட்ஸ் அணியும், அடுத்த போட்டியில் சி.ஆர்.கார்மெண்ட்ஸ் ஈகிள்ஸ் அணியும், ஈ.எஸ்.எஸ்.ஈ.என்.என். எக்ஸ்போர்ட்ஸ் அணியும் மோதுகின்றன.

The post மகளிர் நீதிமன்ற நீதிபதி அறிவுரை நிப்ட்-டீ கல்லூரியில் பின்னலாடை நிறுவன கல்லூரிகளுக்கான கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.

Tags : Nift- ,D College Cricket Tournament ,Knitwear ,Institute ,Colleges ,Tirupur ,Nift ,-Dee ,College ,Women's Court ,-Dee College Cricket Tournament ,Dinakaran ,
× RELATED நிப்ட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவு: நாளையுடன் நிறைவு