×

படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான குறைதீர் கூட்டம், தொழில் முனைவோர் கருத்தரங்கு ஜூன் 30ல் நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் ஜூன் 30 அன்று மாலை 4.30 மணிக்கும், தொடர்ந்து 5.30மணிக்கு முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டமும் நடைபெற உள்ளது. கலெக்டர் தலைமையில், சிவகங்கை கலெக்டர் அலுவலக, அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும். கருத்தரங்கில் சுயதொழில்களுக்கான வாய்ப்புகள் குறித்து, பல்வேறு துறை அலுவலர்கள் பேச உள்ளனர். சிறுதொழில் செய்து முன்னேற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம். குறைதீர் கூட்டத்தில் தங்களது குறைகளுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவி

The post படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Veterans Special Grievance Meeting ,Sivagangai ,Veterans Special Grievance Redressal ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்