×

குட்கா, பான்மசாலா விற்கப்படுவதில்லை என்று விகேபுரத்தில் அனைத்து கடைகளிலும் அறிவிப்பு பலகை

விகேபுரம்,ஜூன் 27: குட்கா, பான்மசாலா விற்கப்படுவதில்லை என்று விகேபுரத்தில் அனைத்து கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று டிஎஸ்பி சதீஷ்குமார் அறிவுரை வழங்கினார். விகேபுரம் வர்த்தக சங்கம் சார்பில் போதை ஒழிப்பு பற்றி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வர்த்த சங்கத்தலைவர் பீட்டர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் சேக் அலி முன்னிலை வகித்தார். போதை ஒழிப்பு பற்றி அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார், விகேபுரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். இக்கூட்டத்தில் அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் பேசுகையில், ‘தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்கப்படுவதில்லை என்று எழுதிய போர்டை அனைத்து பெட்டிக்கடைகளிலும் வைக்க வேண்டும்’ என்றார். இதனை அனைத்து வியாபாரிகளும் ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி முருகேசன், இசக்கி, அய்யாதுரை மற்றும் வியாபாரிகள் பலர் பங்கேறற்னர். வர்த்தக சங்க பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

The post குட்கா, பான்மசாலா விற்கப்படுவதில்லை என்று விகேபுரத்தில் அனைத்து கடைகளிலும் அறிவிப்பு பலகை appeared first on Dinakaran.

Tags : Vikepuram ,Gutka ,Panmasala ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது