×

வழிமுறைகள் குறித்து முன்னோடி விவசாயிகள் விளக்கம் கரூர் ரயில்வே சந்திப்பு பகுதியில் பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும்

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில்வே நிலையம் சந்திப்பு பகுதியில் அனைவரின் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாங்கல், நெரூர், மோகனு£ர், சோமூர், புலியூர், கோயம்பள்ளி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து வாகனங்களும் மார்க்கெட், ரயில்வே நிலையம் வழியாக கரூர் சென்று வருகிறது. மேலும், ரயில்வே நிலையத்தில் இருந்து கரூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பயணிகளும் இந்த சந்திப்பு பகுதியில் நின்றுதான் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே சந்திப்பு பகுதியில் பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. எனவே, அனைத்து பயணிகளின் நலன் கருதி இந்த சந்திப்பு பகுதியில் நிழற்குடை அமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post வழிமுறைகள் குறித்து முன்னோடி விவசாயிகள் விளக்கம் கரூர் ரயில்வே சந்திப்பு பகுதியில் பயணிகள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pioneer ,Karur ,Karur Corporation ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...