×

ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தில் நிழல் தரும் மரங்களை நட்டு பராமரித்த விவசாயி: தலைமை செயலாளர் இறையன்பு நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தில் நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிப்பு செய்த விவசாயியை தலைமை செயலாளர் நேரில் சென்னைக்கு அழைத்து பாராட்டினார். கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், அரங்கூர் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆய்வு செய்து, அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை மரம், மாமரம் போன்ற நிழல் தரும் மரங்களும், பலன் தரும் பழ மரங்களும் நடப்பட்டு இருப்பதை பற்றி மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பி இருந்தார்.

அந்த மரங்களையெல்லாம் 70 வயதான அ.அர்ச்சுனன் என்பவர் நட்டு, பராமரிப்பு செய்கிறார் என்கிற தகவலையும் தெரிவித்திருந்தார். விவசாய கூலியாக இருந்தாலும், மயானத்தில் மரங்களை நட்டு, மரகதச் சோலையாக மாற்றிய அர்ச்சுனனை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று சென்னை, தலைமை செயலகத்திற்கு வரவழைத்து, அவருக்கு பொன்னாடை போர்த்தி, பாராட்டி, ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார். இந்த மயானத்தில் சுற்றுச்சுவர் கட்டி, பாசன நீர் வசதி ஏற்படுத்தி, நன்றாக பராமரிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு நேர்முக கடிதமும் அனுப்பி உள்ளார்.

The post ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தில் நிழல் தரும் மரங்களை நட்டு பராமரித்த விவசாயி: தலைமை செயலாளர் இறையன்பு நேரில் அழைத்து பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Adi ,Dravida ,Chief Secretary ,Thaoyanbu ,Chennai ,Adi Dravida ,
× RELATED அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்...