×

சைக்கிளில் இந்தியாவை சுற்றும் குஜராத் பக்தர்: இன்று நெல்லையப்பர் கோயிலில் தரிசனம்

நெல்லை: குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர் ரபிக்போலோ (64). இந்தியா முழுவதும் சைக்கிளில் ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் இவர், இன்று நெல்லை வந்தார். பின்னர் நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர், கூறியதாவது: எனக்கு 64 வயதாகிறது. திருமணம் ஆகவில்லை. கடந்த 2017ம் ஆண்டு முதல் சைக்கிளில் இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுலா பயணம் மேற்கொண்டு கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து வருகிறேன்.

கடந்த மூன்றரை மாதத்திற்கு முன் சென்னை வந்த நான், தற்போது பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்து விட்டு இன்று நெல்லை வந்துள்ளேன். தொடர்ந்து கிருஷ்ணாபுரம், வைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்ல உள்ளேன். கொரோனா காலத்திலும் எனது ஆன்மிக பயணம் தொடர்ந்தது. அந்தந்த பகுதியில் காவல்துறையினர், அரசு அதிகாரிகள், ஆன்மிக பக்தர்கள் வழிகாட்டியாக உதவுகின்றனர் என்றார்.

The post சைக்கிளில் இந்தியாவை சுற்றும் குஜராத் பக்தர்: இன்று நெல்லையப்பர் கோயிலில் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,India ,Nellaipar Temple ,Nellie ,Rabikpolo ,Rajkot, Gujarat ,
× RELATED இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்...