சென்னை: மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டது.
The post மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!! appeared first on Dinakaran.