
செங்கம்: செங்கம் அடுத்த குப்பநத்தம் பகுதியில் 20 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. செங்கம் அடுத்த குப்பநத்தம் பகுதியில் 60 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பா.முருகேஷூக்கு அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று முதற்கட்டமாக தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ஐ ஞானவேல், துணை தாசில்தார் தமிழரசி, விஏஓ காண்டீபன் உள்பட வருவாய் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசுக்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, 20 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனர். கேப்சன் செங்கம் அடுத்த குப்பநத்தம் பகுதியில் 20 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் அடங்கிய பிறகு வெகுவாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த நிலை மாறி அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. பவுர்ணமி நாட்களில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு மாதமும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், பவுர்ணமி நாட்களில் கோயிலுக்கு வர இயலாத பக்தர்கள் தொடர் அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வருகின்றனர். குறிப்பாக, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.
அதன்படி, சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறையான கடந்த 2 நாட்களாக அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதேபோல், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகரித்திருந்தது. மேலும் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கோடை வெயில் தாக்கம் கடந்த சில நாட்களாக தணிந்திருப்பதால் பக்தர்கள் சிரமமின்றி வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க ஒற்றை வரிசை விரைவு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மாடவீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் பெரிய தெரு, பேகோபுர தெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்படுகின்றன. எனவே, தேரடி வீதி மற்றும் கடலைக்கடை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கோயிலுக்கு வந்த வாகனங்களால் வழக்கம் வழக்கம் போல் நெரிசல் காணப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கட்டண வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
The post 20 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு செங்கம் அடுத்த குப்பநத்தம் பகுதியில் appeared first on Dinakaran.