×

தமிழக அரசுக்கு 6 அம்ச கோரிக்கைகள் மணல், எம்.சாண்டு லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி: திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று தமிழ்நாடு மணல் மற்றும் எம்.சாண்டு லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளனம் சார்பில் அனைத்து மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.மாநில தலைவர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில், மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் அதைச்சார்ந்த தொழிலாளர்கள் சுமார் 5 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கடந்த ஆட்சியில் கேள்விகுறியானது, எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்பட எம்.சாண்டு விற்பனையை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சம்மேளத்தின் மாநில செயலாளர் கண்ணையன், மாநில துணை தலைவர்கள் பழனிசாமி, கைலாசம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தமிழக அரசுக்கு 6 அம்ச கோரிக்கைகள் மணல், எம்.சாண்டு லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government Sandal ,M. Chandu Lorry Owners Association ,Tiruchi ,Tamil Nadu Sand ,M. Sandu Lorry Owners Combined Welfare Federation ,Trichy ,Tamil Nadu Government Sand ,M. Sandu Truck Owners Association ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவனம் நடத்தி ரூ8 கோடி மோசடி: நிறுவனத் தலைவர் கைது