×

கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு வீட்டில் தூங்கிய பெண்ணிடம் ரூ.2.5லட்சம் நகை திருட்டு

 

சின்னசேலம், ஜூன் 26: கச்சிராயபாளையம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் ரூ.2.5லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை போன சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே கோமுகி நதிக்கரையோரம் உள்ள ஏர்வாய்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல்(33). இவரது மனைவி துர்கா(30). இவர்கள் விவசாய தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது பின்வாசல் கதவு திறந்திருந்ததாக தெரிகிறது. அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து துர்கா அணிந்திருந்த 6.25 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.

இது தெரிந்த துர்கா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் அவர்களை துரத்தி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதைப்போல அதே ஊரில் விடியற்காலை சுமார் 5 மணியளவில் 2 வீடுகளில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த வீட்டில் பணம் எதுவும் கிடைக்கவில்லை. இந்த திருட்டு சம்பவம் குறித்து துர்கா கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு வீட்டில் தூங்கிய பெண்ணிடம் ரூ.2.5லட்சம் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kachirayapalayam ,Chinnasalem ,Dinakaran ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்த வாலிபருக்கு கை முறிவு