- பாதுகாப்புக் குழு
- Airwadi
- குழந்தைகள் பாதுகாப்பு குழு
- ஏர்வாடி குழந்தைகள் மையம்
- நெல்லை மாவட்டம்
- ஜனாதிபதி
- தஸ்லிமா அயூப் கான்
- குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்
- தின மலர்
ஏர்வாடி: நெல்லை மாவட்டம் ஏர்வாடி குழந்தைகள் மையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் தஸ்லிமா அயூப்கான் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சாஜன் மேத்யூ, துணைத்தலைவர் பீர்முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரதிநிதி ஹெலினா சிறப்புரை ஆற்றினார். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெஸிமீரா, திமுக நகர செயலாளர் அயூப்கான், குழந்தை வளர்ச்சி திட்டம் மேற்பார்வையாளர் லெட்சுமி, செஞ்சிலுவை சங்க தன்னார்வலர் சபேசன், திமுக உள்ளூர் இளைஞர் பிரதிநிதி ஆஷிக் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர். குழந்தை கடத்தலை தடுத்தல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, குழந்தை தத்தெடுத்தல்,பெண் குழந்தை கல்வி, குழந்தை பாதுகாப்பு, குழந்தை வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கிராம நிர்வாக அதிகாரிகள் நரேஷ் கவுதம், மதுபாலா, டோனாவூர் பெல்லோஷிப் சரோவிந்தா, குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் ஜெயசெல்வி, ஏர்வாடி சிறப்பு காவல் துறை உதவி ஆய்வாளர் நம்பிநாராயணன், கவுன்சிலர்கள் சாபிரா, சந்திரசேகர் மற்றும் பெற்றோர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.
The post ஏர்வாடியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.