கோவை, ஜூன் 26: கோவை நவக்கரையில் ஏஜேகே கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் ஆடவர்களுக்கான தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, ஏஜேகே டர்ப்டென் நவீன கால்பந்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலுமிருந்து 38 அணிகள் பங்கேற்றன. நாக்-அவுட் முறையில் பகல், இரவு போட்டிகளாக நடந்தது. இப்போட்டியில், கால்பந்து வீரர்கள் சாதுர்யமாக பந்தை கடந்து இலக்கை நெருங்கினர். மிகவும் சுவராஸ்யமாக நடந்த இப்போட்டியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
இப்போட்டியில், முதல் இடத்தை நேரு எப்.சி அணியும், இரண்டாம் இடத்தை டைமண்ட் எப்.சி. அணியும், பிளாக்ஸ் குவாட் எப்.சி. அணி மூன்றாவது இடத்தையும், சொஸ்ஸ்ர் ஒட்டப்பாளம் அணி 4-ம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது. ரொக்க பரிசு மற்றும் கோப்பையை ஏஜேகே கல்வி நிறுவனங்களின் செயலர் அஜித்குமார் லால் மோகன் வழங்கினார். உடற் கல்வித்துறை இயக்குநர் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினர்.
The post தேசிய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி appeared first on Dinakaran.