×

செட்டிபாளையம் அருகே டிப்பர் லாரியின் இரும்பு கதவு விழுந்து இளைஞர் பலி

 

மதுக்கரை, ஜூன் 26: விருதுநகர் மாவட்டம், திருச்சுலியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் பிரேம்குமார் (21) கடந்த சில தினங்களுக்கு முன் கோவை வந்த இவர் செட்டிபாளையம் அருகே பெரியகுயிலி பகுதியில் தனியார் நிறுவனத்தில் தங்கி ஜேசிபி இயந்திர ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் கல்குவாரிக்கு லோடு ஏற்ற வந்த டிப்பர் லாரியின் பின்புறம் நின்றுகொண்டு இருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக டிப்பர் லாரியின் இரும்பு கதவு பிரேம்குமார் மீது விழுந்தது. இதில் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பிரேம்குமாரை மீட்டு சூலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செட்டிபாளையம் அருகே டிப்பர் லாரியின் இரும்பு கதவு விழுந்து இளைஞர் பலி appeared first on Dinakaran.

Tags : Chettipalayam ,Madhukarai ,Premkumar ,Kumar ,Tiruchuli, Virudhunagar district ,
× RELATED மதுக்கரை ஆர்.டி.ஓ.செக்போஸ்ட் அருகே...