ஓசூர்: ஓசூர் மாநகராட்சி மிடுகரப்பள்ளியில், சாலை பணிகளை மேயர் ஆய்வு செய்தார். ஓசூர் மாநகராட்சி 37வது வார்டிற்குட்பட்ட சக்தி லே-அவுட், பிரிட்ஜ் ஹோம், மிடுகரப்பள்ளி பகுதியில் மேயர் சத்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், குடியிருப்பு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் சென்னீரப்பா, வார்டு நிர்வாகிகள் முரளி மோகன், மணி, முருகன், தயாளன், சோமசேகர் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post சாலை பணிகளை மேயர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.