×

ஆனி திருமஞ்சன விழா பசுபதீஸ்வரா கோயிலில் சிறப்பு அபிஷேகம்

கரூர்: ஆனி திருமஞ்சன விழாவினை முன்னிட்டு கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆண்டுதோறும் ஆனி மாதம் உத்தர நட்சத்திர நாளன்று சிவன் கோயில்களில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, கரூர் பசுபதீஸ்வரா கோயிலில் நேற்று ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. இந்த விழாவினை முன்னிட்டு நடராஜ சுவாமிக்கும், சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழாவில் நேற்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 

The post ஆனி திருமஞ்சன விழா பசுபதீஸ்வரா கோயிலில் சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Ani Thirumanjana Festival Special Abhishekam ,Pasupadeeswara Temple ,Karur ,Ani Thirumanjana festival ,Karur Pasupadeeswara temple ,
× RELATED கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு